வட கொரியா திடீர் ஏவுகணை தாக்குதல்? -'அலர்ட்' ஆகும் ஜப்பான் - என்ன நடந்தது?

Mar 14, 2026 - 14:31
 0
வட கொரியா திடீர் ஏவுகணை தாக்குதல்? -'அலர்ட்' ஆகும் ஜப்பான் - என்ன நடந்தது?

ஒரு பக்கம் ஈரான் போர், உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் சொந்த நாட்டில் தயாரித்த ஏவுகணை, துப்பாக்கி போன்றவற்றை சோதித்து வருகிறார்.

இந்த நிலையில், ஜப்பான் மீது வட கொரியா தாக்குதல் நடத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சானே தகைச்சி
சானே தகைச்சி

இது குறித்து ஜப்பான் பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில், "வட கொரியா சந்தேகப்படக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது.

இதனால், ஜப்பான் பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளதாவது...

இது குறித்த தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்து மக்களுக்கு சரியான விதத்திலும், நேரத்திலும் தர‌ வேண்டும்.

விமானங்கள், கப்பல்கள் மற்றும் பிற சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.

தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்... அசாதாரண சூழலுக்கு தயாராக வேண்டும்" என்று பதிவிட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0