"சுருள் முடி கொண்ட சீதையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை!" - சாய் பல்லவி பற்றி பாலிவுட் நடிகை

Jul 25, 2026 - 15:02
0
"சுருள் முடி கொண்ட சீதையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை!" - சாய் பல்லவி பற்றி பாலிவுட் நடிகை

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகிவரும் 'ராமாயணா' படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்குத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தின் பிரத்யேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு நடைபெற்றது.

Sai Pallavi - Ramayana
Sai Pallavi - Ramayana

அங்கு படக்குழுவினர் கலந்துகொண்டு படம் தொடர்பாகப் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிலையில் சாய் பல்லவி சீதையாக நடிப்பது பற்றிப் புகழ்பெற்ற ராமாயணம் (இந்தியில் வெளிவந்த தொடர் இது) தொலைக்காட்சி தொடரில் சீதையாக நடித்திருந்த தீபிகா சிக்லியா பேசியிருக்கிறார்.

அவர், "நான் சாய் பல்லவியின் நடிப்பைப் பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் அற்புதமான கலைஞர். ஆனால், சீதையாக அவர் திரையில் எப்படித் தெரிவார் என்று எனக்கு இப்போது தெரியாது.

திரையில் பார்த்த பிறகுதான் அதை முடிவு செய்ய முடியும். ராமாயணத்தில் சீதையின் தோற்றம் பற்றிய தெளிவான வர்ணனைகள் உள்ளன.

பாதாம் போன்ற கண்கள், குறிப்பிட்ட உயரம், கூந்தல் மற்றும் மேனி நிறம் என அதில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய ராமாயண சீரியலின் இயக்குநர் ராமநந்த் சாகர் அந்த அம்சங்களைத்தான் தேடினார்.

deepika chikhalia
deepika chikhalia

அதை என்னிடம் கண்டறிந்து நடிக்க வைத்தார். அதுமட்டுமல்லாமல், ராமாயணத்தில் சுருள் முடி கொண்ட சீதையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

கொரோனா லாக்டவுன் காலத்தில் எங்களது பழைய ராமாயணம் சீரியல் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு, இன்றைய புதிய தலைமுறையினரின் மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனால், அந்தப் பிம்பத்தை மக்கள் மனதிலிருந்து எளிதில் அழித்துவிட முடியாது," எனக் கூறியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User