`எத்தனை தடவை தேசிய கீதம் போடணும்னு நான் முடிவு பண்ணிப்பேன்!' - அவையில் கடுப்பான சபாநாயகர்
ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் அவையில் நடந்து வருகிறது. அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ வேலு முன்வைத்த விமர்சனம் ஒன்றிற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தார்.

சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது பேசுபொருளாது. இதுதொடர்பாக, இன்று ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய எ.வ.வேலு, 'மாநிலங்களுக்கான உரிமையை போராடி பெற்றிருக்கிறோம்.
இன்று இரண்டு முறை தேசிய கீதத்தை போட சொல்பவர்கள், நாளை மூன்று முறை போட சொல்வார்கள் அடுத்து நான்கு முறை என்பார்கள்' என விமர்சித்த நிலையில் இடைமறித்த சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், 'இங்கு நான் தான் சபாநாயகர் எத்தனை முறை பாடல் போட வேண்டும் என்பதையெல்லாம் நான் முடிவு செய்து கொள்கிறேன்' என கடுமையாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ் குமார், 'மாநில உரிமைகளை ஒரு போதும் விடமாட்டோம். ஒன்றிய அரசின் அரசாணையை மீறி தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் போட்டிருக்கிறோம்' என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)