திருச்சி: ரூ.50 கோடி மதிப்பிலான ஸ்ரீரங்கம் கோயில் நிலம் மோசடி - திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

Sep 19, 2026 - 16:31
0
திருச்சி: ரூ.50 கோடி மதிப்பிலான ஸ்ரீரங்கம் கோயில் நிலம் மோசடி - திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

திருச்சி, ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போலியான ஆவணங்களை கொடுத்து அந்த பகுதியின் தி.மு.க செயலாளர் ராம்குமார் என்பவர் தனது பெயருக்கு கடந்த 2022-ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி, கோயில் நிலத்தை தனது பெயருக்கு மாற்றியதோடு மட்டுமல்லாமல், அந்த இடத்தில் தி.மு.க கட்சி அலுவலகத்தை இன்றளவும் நடத்தி வருகிறார். இந்த தி.மு.க பிரமுகரின் மனைவி, வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார். இந்த விவரங்கள் கிடைத்தவுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலையிட்டு தற்போது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு அந்த தி.மு.க பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராம்குமார்

மேலும், இணை ஆணையர் மூலம் அந்த இடத்தில் எந்த பத்திரப்பதிவும் செய்யக் கூடாது என சார்பதிவாளருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. விரைவில் தி.மு.க பிரமுகர் கைது செய்யப்பட இருப்பதாக சொல்கிறார்கள். பிரசித்திபெற்ற ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தி.மு.க பிரமுகர் ஒருவர் அபகரித்ததாக சொல்லப்படும் சம்பவம், திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User