திருச்சி: 'குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்கக் கூடாது!' - கோரிக்கை முன்வைக்கும் சமூக ஆர்வலர்கள்

Jul 30, 2026 - 14:30
0
திருச்சி: 'குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்கக் கூடாது!' - கோரிக்கை முன்வைக்கும் சமூக ஆர்வலர்கள்

தமிழ்நாட்டில் குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்க முன்மொழியப்பட்ட திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, எக்ஸ்னோரா, மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு, ட்ரீச்சி காதலர்கள் (Treechy Lovers), சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி மன்றம் உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.

அது பற்றி, மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் 'தண்ணீர்' நீளமேகத்திடம் பேசினோம்.

'தண்ணீர்' நீளமேகம்

"திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ONCE (இயற்கைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள்) சார்பாக, தமிழக அரசின் குடிநீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்கும் திட்டம் குறித்த செய்திகள் வந்துள்ளன. இத்தகைய ஒரு மாதிரி ஏற்கெனவே கோயம்புத்தூரில் செயல்படுத்தப்பட்டுள்ளது. SUEZ என்ற பிரெஞ்சு நிறுவனம் மூலம் இதை சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தத் திட்டங்கள் உள்ளன என்பதையும் நாங்கள் அறிகிறோம். அதனால், இயற்கை மூலங்களிலிருந்து எடுக்கப்படும் நீர் ஓர் அடிப்படை மனித உரிமை மற்றும் அனைத்து குடிமக்களின் பொதுவான பாரம்பர்யச் சொத்து ஆகும். அதனை ஒரு வணிகப் பொருளாகக் கருத முடியாது, அவ்வாறு கருதவும் கூடாது. இதனால், முன்மொழியப்பட்ட தனியார்மயமாக்கல் பல தீவிரமான கவலைகளை எழுப்புகிறது. எனவே, இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User