நெதர்லாந்திற்கு சென்ற மோடி; 18-ம் நூற்றாண்டு சோழ தேச செப்பு தகடுகள் மீண்டும் இந்தியா வருகின்றன!

May 16, 2026 - 20:31
0
நெதர்லாந்திற்கு சென்ற மோடி; 18-ம் நூற்றாண்டு சோழ தேச செப்பு தகடுகள் மீண்டும் இந்தியா வருகின்றன!

18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து நெதர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆனைமங்கலம் செப்புத் தகடுகள் மீண்டும் இங்கே வர உள்ளன.

நேற்றிலிருந்து வருகிற 20-ம் தேதி வரை, ஐந்து நாட்டுப் பயணங்களில் இருக்கிறார் இந்திய பிரதமர் மோடி.

அதில் ஒரு பகுதியாக, தற்போது நெதர்லாந்தில் இருக்கிறார் மோடி.

மோடியின் பயணத்தையொட்டி, 11-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்தியாவின் ஆனைமங்கலம் செப்புத் தகடுகளை இந்தியாவிற்கு கொடுக்க நெதர்லாந்து ஒப்புக்கொண்டுள்ளது.

நெதர்லாந்தில் மோடி
நெதர்லாந்தில் மோடி

இது முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்து தகடுகள் ஆகும். இந்தத் தகடுகளில் நாகப்பட்டினத்தில் இருந்து புத்த மடாலயத்திற்கு வந்த நில வருமானம் மற்றும் வரி ஆகியவற்றை பற்றி இடம்பெற்றுள்ளது.

18-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மிஷனரி மூலம் டச் அதிகாரி ஒருவர் இந்தத் தகடுகளை கொண்டு சென்றுள்ளார்.

தற்போது இது மீண்டும் மோடியின் பயணத்தையொட்டி இந்தியா வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User