`எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டு செயல்படும் அரசு' - த.வெ.க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு

Jul 06, 2026 - 14:01
0
`எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டு செயல்படும் அரசு' - த.வெ.க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கும் அரசாக தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தை சந்தித்த பிறகு பேசிய அவர், தமிழக நீர்வளத் துறையின் மேம்பாட்டிற்காக பல்வேறு பரிந்துரைகள் மற்றும் திட்டங்களை அரசிடம் வழங்கியுள்ளதாக கூறினார்.

அன்புமணி
அன்புமணி

“தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய நீர்த்திட்டங்கள், அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் மற்றும் நீர்வள மேலாண்மை தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை நாங்கள் அரசிடம் வழங்கியுள்ளோம். ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுத்து வருகிறோம்,” என்றார்.

மேலும், “இது மிகப்பெரிய மாற்றமாக நான் பார்க்கிறேன். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில், எதிர்க்கட்சிகளையும் அழைத்து அவர்களது ஆலோசனைகள் மற்றும் யோசனைகளைக் கேட்டு, அதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாக தமிழக வெற்றிக்கழக அரசு உள்ளது. இதற்காக அந்த அரசை பாராட்டுகிறேன்,” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User