தருமபுரி: கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது போக்சோ

Jun 26, 2026 - 11:02
0
தருமபுரி: கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது போக்சோ

கல்லூரியில் படித்த 18 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி பேருந்து ஓட்டுநர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பென்னாகரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்சோ
போக்சோ

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு 18 வயது கல்லூரி மாணவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரிடம் அரசு மருத்துவர் விவரங்கள் கேட்டபோது, திருமணம் ஆகாத நிலையில் அந்த மாணவி கர்ப்பமாகியிருப்பது தெரிய வந்தது.

உடனே இதுகுறித்து பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே மருத்துவமனைக்கு வந்த மகளிர் காவல்துறை ஆய்வாளர் மாணவியிடம் விசாரணை நடத்தினார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அப்போது, சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் அந்த மாணவி படித்து வந்தபோது, அக்கல்லூரியில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றிய எரியூர் அருகே பகுதியைச் சேர்ந்த சதாசிவம் (30) என்பவர் அவரை மிரட்டி, வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

மாணவியின் புகாரின் அடிப்படையில், சதாசிவம் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக உள்ளவரை காவல்துறை தேடி வருகிறது

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User