அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை: மலேசியாவில் படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு நிதி விடுவிப்பு!

Sep 19, 2026 - 15:30
0
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை: மலேசியாவில் படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு நிதி விடுவிப்பு!

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பைப் படித்து வருகிறார் மாணவர் பாரதிதாசன்.

இவருக்கு இரண்டாம் ஆண்டு உதவித் தொகை கிடைக்கவில்லை. இதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், பணம் விடுவிக்கப்பட வேண்டும் என்று கடந்த மாதம் வீடியோ வெளியிட்டிருந்தார் பாரதிதாசன்.

இவர் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று பாரதிதாசன் வீடியோ குறித்துப் பேசியிருந்தார் தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு.

வன்னி அரசு
வன்னி அரசு

இதற்குப் பதில் தரும் விதமாக, நேற்று முன்தினம் (செப்டம்பர் 17), ‘நான் ஆவணத்தை அனுப்பிவிட்டேன். ஆனால், என் மீது தனிநபர் தாக்குதல் நடத்தப்படுகிறது’ என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.

பாரதிதாசன் வீடியோவைப் பார்த்த எதிர்க்கட்சிகள் அவருக்கான உதவித்தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்கிற குரல் எழுப்பின.

இதையடுத்து, இன்று பாரதிதாசனின் இரண்டாம் ஆண்டு உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User