'சண்டை இன்னும் முடியல!' - பட்ஜெட்டுக்கு தனித்தனியாக வந்த எடப்பாடி & எஸ்.பி.வேலுமணி

Aug 05, 2026 - 13:31
0
'சண்டை இன்னும் முடியல!' - பட்ஜெட்டுக்கு தனித்தனியாக வந்த எடப்பாடி & எஸ்.பி.வேலுமணி

2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட் செஷனுக்காக வருகை தந்த அதிமுகவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சட்டமன்றத்துக்குள் சென்றிருந்தனர்.

CV Team
CV Team

காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. இதற்காக காலை 9:30 மணியளவில் எடப்பாடி பழனிசானி சட்டமன்ற வளாகத்துக்கு வந்தார். அவரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.காமராஜ் போன்ற எம்.எல்.ஏக்கள் வரவேற்று அவைக்குள் அழைத்து சென்றனர்.

எடப்பாடி பழனிசாமி அவைக்குள் சென்று அரைமணி நேரம் கழித்த பிறகுதான் கட்சியின் இன்னொரு டீமான எஸ்.பி.வேலுமணி டீம் வந்தது. வேலுமணியுடன் சி.வி.சண்முகமும் கே.பி.அன்பழகனும் வந்திருந்தனர். நம்க்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பின் போதும் இரு அணிகளும் மாற்றி மாற்றி வாக்களித்தன. ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிப்பு தீர்மானத்திம் இரு தரப்பினரும் தனித்தனியாகவே வந்திருந்தனர்.

CV vs EPS

'சசிகலா, டிடிவி என பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். எங்களுக்கு எங்களின் பழைய பதவியை மீண்டும் வழங்க வேண்டும்' என எஸ்.பி.வேலுமணி சமீபத்தில் பேசியிருந்தார். அதைதொடர்ந்து சட்டமன்றத்துக்கும் தனி டீமாக வருவதை பார்க்கையில் அதிமுகவுக்குள் 'இன்னும் சண்டை ஓயவில்லை' என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User