மயிலாப்பூரில் மலராத தாமரை - 'மீண்டும் மீண்டும்' தோல்வியில் தமிழிசை சௌந்தரராஜன்!

May 04, 2026 - 17:01
0
மயிலாப்பூரில் மலராத தாமரை - 'மீண்டும் மீண்டும்' தோல்வியில் தமிழிசை சௌந்தரராஜன்!

2006-ம் ஆண்டில் இருந்து பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார்.

ஆனால், இதுவரை எந்தத் தேர்தலும் அவருக்குக் கைக்கொடுக்கவில்லை... சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரண்டிலுமே மக்கள் இதுவரை அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக எம்.பி கனிமொழியை எதிர்த்து களம் கண்டார் தமிழிசை.

ஆனால், அந்தத் தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்று, நாடாளுமன்ற படிகள் ஏறினார்.

இதனையடுத்து, பாஜக தலைமை அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழிசையை தெலங்கானா கவர்னர் ஆக்கி அழகு பார்த்தது.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

2021-ம் ஆண்டு புதுச்சேரியின் துணை ஆளுநர் பதவியும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

ஆனால், 'ஆசை யாரைத் தான் விட்டது?' 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மார்ச் மாதம் தனது ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார்.

ராஜினாமாவிற்கு பின், சென்னை தெற்கு தொகுதியில் திமுக எம்.பி தமிழச்சி தங்க பாண்டியனை எதிர்த்து போட்டியிட்டார்.

ஆனால், அதிலும் தமிழிசைக்கு மக்கள் கொடுத்தது தோல்வியைத் தான்.

இருந்தும், தமிழிசை தொடர்ந்து அரசியலில் சுழன்று வந்தார். இதன் விளைவாக, 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழிசைக்கு மயிலாப்பூர் தொகுதி கொடுக்கப்பட்டது.

மயிலாப்பூரில் பிராமணர்கள் மற்றும் மீனவர் சமூக வாக்குகளை மிக அதிகமாக நம்பியே அங்கே பாஜக களமிறங்கியது. ஆனால், அங்கே அந்த இரு சமூகங்களுக்கும் தவெக தான் சாய்ஸாக இருந்துள்ளது என்று களம் சொல்கிறது.

ஆக, தவெக-வை சேர்ந்த வெங்கட்ராமன் முதல் இடத்தையும், திமுக-வை சேர்ந்த த.வேலு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்து மூன்றாம் இடத்தையே பிடித்துள்ளார் தமிழிசை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User