'ஏர் ஏசியாவில் வேலை!' - சென்னைஸ் அமிர்த்த நடத்திய வேலைவாய்ப்பு முகாம்!

May 03, 2026 - 18:32
0
'ஏர் ஏசியாவில் வேலை!' - சென்னைஸ் அமிர்த்த நடத்திய வேலைவாய்ப்பு முகாம்!

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரியில், ஏர் ஏசியா வளாக வேலைவாய்ப்பு (CAMPUS INTERVIEW) முகாம் சிறப்பு விருந்தினர் சரவணன் ராஜ் முனுசாமி, கௌரவ விருந்தினர் டத்தோ ஸெரி டாக்டர் எஸ்.கே. தேவமணி மற்றும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

சென்னையில் விமானத் துறையில் கல்வி–தொழில் இணைப்பை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக, சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி வளாகத்தில் ஏர் ஏசியா நிறுவனம் முதன்முறையாக வளாக வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட்
சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட்

இந்த வேலைவாய்ப்பு முகாமை வெற்றிகரமாக நடத்திய சென்னைஸ் அமிர்தா, தனது மாணவர்களுக்கு ஆசியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர்ஏசியாவில் நேரடி வேலைவாய்ப்பு வாய்ப்புகளை வழங்கியது.

குறைந்த செலவில் விமானப் பயணத்தை மக்களுக்கு எளிதாகக் கொண்டு வந்த ஏர்ஏசியா, தனது விரிந்த சர்வதேச வலையமைப்பு, வலுவான பிராண்ட் நிலை மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சி மூலம் உலக விமானத் துறையில் முன்னணி அளவுகோல்களை உருவாக்கி வருகிறது.

இதனால், விமானத் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இது மிகவும் மனம் கவர்ந்த நிறுவனமாகத் திகழ்கிறது.

விமான தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வித் துறையில் சிறப்பான அனுபவம் கொண்ட சென்னைஸ் அமிர்தா, இதுவரை 31,650-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ளது.

இதன் மூலம், உலகத் தரத்திற்கேற்ற தொழில்நுட்பத் திறன்கள் கொண்ட நிபுணர்களை உருவாக்கும் தனது அர்ப்பணிப்பை சென்னைஸ் அமிர்தா உறுதிப்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியின்போது, ஏர்ஏசியா ரெட்க்யூ (RedQ), கோலாலம்பூரில் AOC லைன் பராமரிப்புப் பிரிவுத் தலைவரான திரு. சரவணன் ராஜ் முனிசாமி அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, விமானத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், செயல்திறன் மேம்பாடு மற்றும் சர்வதேச வாய்ப்புகள் குறித்து பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த வளாக வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஏர்ஏசியாவில் 6 மாத கால பயிற்சி (Internship) பெறுவார்கள். அவர்களின் செயல்திறனைப் பொறுத்து உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

மேலும், இந்தத் திட்டம் மூலம் சர்வதேச விமான செயல்பாடுகள் குறித்து அனுபவம் பெறும் வாய்ப்பும், வெளிநாட்டு பணியிட முன்னேற்றத்திற்கான பாதையும் உருவாகிறது.

சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் நிறுவனர் பூமிநாதன்
சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் நிறுவனர் பூமிநாதன்

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மலேசியாவின் முன்னாள் துணை அமைச்சரும், பெராக் மாநில சட்டமன்றத்தின் முன்னாள் தலைவருமான மாண்புமிகு டத்தோ’ ஸெரி டாக்டர் எஸ். கே. தேவமணி அவர்கள் புதிய அரங்கத்தைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வு, சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமத்தின் தலைவர் திரு. பூமி நாதன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த முயற்சி, கல்வி பயிற்சியையும் தொழில்துறை தேவைகளையும் இணைக்கும் பாலமாக இருந்து, மாணவர்கள் உலகளாவிய விமானத் துறையில் தங்கள் தொழில்முனைவை முன்னெடுக்க உதவுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User