"எம்பி-க்களே இல்லாத தவெக-வை எப்படி இந்தியாக் கூட்டணில் சேர்ப்பது?" - மாணிக்கம் தாகூர் கேள்வி

Aug 23, 2026 - 11:30
0
"எம்பி-க்களே இல்லாத தவெக-வை எப்படி இந்தியாக் கூட்டணில் சேர்ப்பது?" - மாணிக்கம் தாகூர் கேள்வி

கோவை விமானநிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது, “தற்போது 23 கட்சிகள் இந்தியாக் கூட்டணியில் தொடர்கின்றன.

தவெகவுக்கு எப்போது எம்.பிக்கள் வருகிறார்களோ, அப்போது நாங்கள் அவர்களை இந்தியாக் கூட்டணியில் இணைந்து கொள்ளச் சொல்லுவோம். எம்.பி.க்களே இல்லாத தவெகவை எப்படி இந்தியாக் கூட்டணில் தற்போது சேர்க்க முடியும்?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

விஜய்யைப் பொறுத்தவரை 106 இடங்கள் கிடைத்ததும், அவரை முதலில் தொடர்புகொண்டு பேசியது ராகுல் காந்தி. தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக ராகுல்காந்தியிடம் ஆதரவு கேட்டார் விஜய்.

தவெகவின் இன்றைய அமைச்சர்களுக்கு அது நன்றாகத் தெரியும். அவர்கள் அமைச்சர் ஆவதற்கும், ஆட்சி அமைப்பதற்கும் முதலில் ஆதரவு தெரிவித்தது காங்கிரஸ் கட்சி. இல்லாவிட்டால், அமித்ஷா தவெக ஆட்சியை வர விடாமல் செய்திருப்பார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

கட்சியை உடைத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியிருப்பார்கள். இந்த நிலை அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்றத் தேர்தல் வரட்டும், விஜய் சரியான முடிவை எடுப்பார்” என்று தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User