"அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்? என்ன பயம்?"- உதயநிதி கேள்வி

Aug 07, 2026 - 11:32
0
"அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்? என்ன பயம்?"- உதயநிதி கேள்வி

தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மேகதாது விவகாரம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், " மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் கடந்த ஒரு மாதத்தில் கர்நாடகா அரசு பல முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அங்கே எல்லா கட்சியினரும் ஒரே எண்ணத்தோடு நிற்கின்றன. ஆனால், இங்கே தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தையே கூட்டவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்? என்ன பயம்?

இந்த அரசு ஒரு மாடலை பின்பற்றுகிறது. அதாவது, விஷயங்களை முதலில் இவர்களே கசிய விடுவார்கள். எதிர்ப்பு எழுந்தால் அப்படியே பின்வாங்கி விடுவார்கள். கர்நாடகாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவெடுத்தது யார்? பின்னர் அந்தப் பயணம் ஏன் ரத்து செய்யப்பட்டது? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதனைத்தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும் தண்ணீர் திறக்கவில்லை. புதிய காவிரி நடுவர் மன்றம் அமைப்பதை அதிமுக ஏற்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User