`ரூ.2.47 கோடி கட்டுங்க; 7 நாள்கள்தான் கெடு’ - ஏழை விவசாயி பெயரில் ஜிஎஸ்டி மோசடி!

May 14, 2026 - 14:31
0
`ரூ.2.47 கோடி கட்டுங்க; 7 நாள்கள்தான் கெடு’ - ஏழை விவசாயி பெயரில் ஜிஎஸ்டி மோசடி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள வீரிசெட்டிபல்லி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர் (வயது 32). விவசாயியான இவர், கறவை மாடு வளர்ப்பு மூலமாக கிடைக்கும் குறைவான பால் வருமானத்தை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறார். இரும்பு தகரம் பொருத்தப்பட்ட கூரை வீட்டில்தான் பிரபாகர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இருந்து பிரபாகருக்கு ஒரு நோட்டீஸ் வந்திருக்கிறது.

விவசாயி பிரபாகர்

அதில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள பேகேப்பள்ளி கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் `ராஜூ டிரேடர்ஸ்’ என்ற நிறுவனத்தை பிரபாகர் நடத்தி வருவதாகவும், 2023-2024-ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி வரித்தொகையை கட்டாத காரணத்தினால், அதற்கான அபராதத்துடன் சேர்த்து மொத்தமாக 2,47,77,029 ரூபாயை ஏழு நாள்களுக்குள் ஆன்லைன் பேமெண்ட் மூலமாக செலுத்த வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் மேல்நடவடிக்கை எடுத்து தொகை வசூலிக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான பிரபாகர் உடனடியாக ஆம்பூர் ஜி.எஸ்.டி உதவி ஆணையர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு `அப்படியொரு நிறுவனத்தை நான் நடத்தவில்லை’ என விளக்கமளித்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக பரதராமி காவல் நிலையம் சென்றும் தன் பெயரிலான ஜி.எஸ்.டி மோசடி பற்றி புகார் அளித்திருக்கிறார். இந்த வரிவிதிப்பால் மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறது பிரபாகரின் குடும்பம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User