Retirement Fund: 50 வயதைக் கடந்தவர்கள் Lumpsum முதலீடு செய்வது எப்படி?
ஓய்வுக்காலம் நெருங்கும்போது, "என் உழைப்பின் சேமிப்பு அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீடிக்குமா?" என்ற கவலை ஒவ்வொரு மனிதருக்கும் எழும்.
50 வயதைக் கடந்த இந்தியர்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் (FD) தான் எப்போதும் முதல் சாய்ஸ். எஃப்டி-க்கள் மூலதனப் பாதுகாப்பையும், மாதாந்திர வட்டியையும், அசைக்க முடியாத நிம்மதியையும் தருகின்றன. தலைமுறை தலைமுறையாக இந்தியர்களின் நம்பிக்கையாக எஃப்டி இருக்கிறது.
ஆனால், தற்போதைய டிஜிட்டல் பொருளாதார சூழலில் எஃப்டி மட்டுமே உங்களின் ஒட்டுமொத்த ஓய்வுக்கால தேவைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்துவிடுமா என்பதை ஆழமாக யோசிக்க வேண்டும்.
பழைய பணவீக்கம்... என்றுமே பிரச்னைதான்!
இன்றைய சவாலே, பணவீக்கத்தை வெல்லும் அளவுக்குப் பணத்தை உருவாக்குவதுதான். இந்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிடும் நுகர்வோர் விலை குறியீடு (CPI) தரவுகளின்படி, இந்தியாவின் சராசரி பணவீக்கம் 5% முதல் 6% ஆக உள்ளது.
இதன் பொருள், அடுத்த 12 ஆண்டுகளில் விலைவாசி இருமடங்காக உயரும்! பெட்ரோல், உணவு, மருத்துவ செலவு என எல்லாமே 2 மடங்கு அதிகரிக்கும்... எஃப்டி நிலையான வட்டி தந்தாலும், நீண்டகாலத்தில் இந்த ராக்கெட் வேக விலைவாசி உயர்வை அதனால் சமாளிக்க முடியாது. இதனால்தான், முதலீட்டைப் பிரித்து வைக்கும் டைவர்சிஃபைடு உத்தி தேவைப்படுகிறது.

ரிஸ்க்கைக் குறைக்கும் ஹைபிரிட் ஃபண்டுகள்
இந்திய சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி (SEBI) அமைப்பின் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் (Hybrid Mutual Funds) பங்குகளையும், கடன் பத்திரங்களையும் கலந்து முதலீடு செய்கின்றன. கடன் பத்திரங்கள் முதலீட்டிற்கு ஸ்திரத்தன்மையைத் தர, பங்குகள் பணவீக்கத்தை வெல்லும் நீண்டகால வளர்ச்சியைத் தருகின்றன.
உங்களிடம் ரூ. 1 கோடி ஓய்வூதியத் தொகை இருக்கிறது என வைப்போம். பாதுகாப்பு மற்றும் அவசரத் தேவைகளுக்காக 60% தொகையை (ரூ. 60 லட்சம்) எஃப்டி மற்றும் அரசு சேமிப்புத் திட்டங்களிலும், நீண்டகால பணவீக்கத்தை வெல்ல 40% தொகையை (ரூ. 40 லட்சம்) ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் பிரிக்கலாம். இதிலிருந்து மாத வருமானமாக ₹34000 கிடைக்கும். (ஆனால் இது வளராது).
மியூச்சுவல் ஃபண்ட் பகுதியில் இருந்து மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற எஸ்.டபிள்யூ.பி (SWP) வசதியைப் பயன்படுத்தலாம். உலகளாவிய நிதி ஆலோசகர்கள் பரிந்துரைக்கும் பாதுகாப்பான 4% விதியின்படி (Safe Withdrawal Rate), இந்த ரூ. 40 லட்சத்திலிருந்து ஆண்டுக்கு ரூ. 1,60,000 - மாதம் சுமார் ரூ. 13,333, பென்ஷன் போல எடுக்கலாம்.
இந்த ஹைபிரிட் ஃபண்ட் மிதமான 10% நீண்டகால வருடாந்திர வளர்ச்சியைத் தந்தால் கூட, நீங்கள் எடுக்கும் 4% போக, மீதமுள்ள 6% லாபம் அசலோடு சேர்ந்து கொண்டே இருக்கும். இதனால் அசல் குறையாமல் வளர்வதோடு, காலப்போக்கில் பென்ஷன் தொகையையும் உங்களால் உயர்த்திக் கொள்ள முடியும்.
எஃப்டி வட்டி மட்டுமே உங்களைப் பணவீக்கத்திலிருந்து காப்பாற்றாது. ரிசர்வ் வங்கி மற்றும் செபி கண்காணிப்பில் உள்ள இந்தத் திட்டங்கள் உங்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கி தரும்.
ஓய்வுக்காலத் திட்டமிடல் என்பது அதிக லாபத்திற்கான ரேஸ் அல்ல. அது மூலதனப் பாதுகாப்பு மற்றும் மாதாந்திர வருமானத்திற்கான உத்தி. எஃப்டி உங்களுக்குப் பாதுகாப்பைத் தரும்; ஹைபிரிட் ஃபண்டுகள் வளர்ச்சியைத் தரும். இரண்டும் இணைந்தால், உங்கள் ஓய்வுக்காலம் என்றும் நிம்மதியானது!

என்னுடைய லம்ப்சம் சேமிப்பை எப்படி 10% வளர்ச்சி தரும் முதலீடாக மாற்றுவது?
உங்களுக்கு 50+ வயதா?
மேலே குறிப்பிட்டது போல உங்களுடைய மொத்த சேமிப்பை எப்படி முதலீடாக மாற்றுவது?
மியூச்சுவல் ஃபண்ட்ஸ் SWP துவங்குவது எப்படி?
எனக்கு எவ்வளவு ரிட்டன்ஸ் கிடைக்கும்?
இதன் சாதக பாதகங்கள் என்ன?
அனைத்தையும் அறிந்துகொள்ள வரும் ஞாயிறு, ஜூன் 28 காலை 11 மணிக்கு 'லாபம்' வழங்கும் லம்சம் முதலீட்டு வழிகாட்டல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.
100 பேருக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-jun28-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_jun28_2026
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)