கல்பாக்கம்: 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவன் உட்பட இருவர் கைது!

Jun 25, 2026 - 09:31
0
கல்பாக்கம்: 14 வயது சிறுமி  கூட்டு பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவன் உட்பட இருவர் கைது!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்சியில் உள்ள காரைத்திட்டு கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டை விட்டு வெளியேச் சென்றிருந்தார். வெளியே சென்ற மகள் நீண்ட நேரம் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தந்தை மகளை தேடி சென்றார். அந்த வழியாக சென்றவர்கள் 'உங்கள் மகள் இந்த வழியாகத்தான் சென்றார்' என்று சொன்ன தகவலின் பேரில் சந்தேகமடைந்து, ஒரு மொட்டை மாடி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு சிறுமி அலங்கோலமாக மயக்க நிலையில் கிடந்தார். இதைக் கண்டு பதறிய அவரது தந்தை தன்னுடைய மகளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும், இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரைத்திட்டு பகுதியில் ஒரு இடத்தில் பதுங்கியிருந்த கல்லூரி மாணவர் மகேஸ்வரன் (20), அஜய் (27) இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கைது

கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அஜய் மரக்காணத்தில் உள்ள இறால் பண்ணையில் கூலிவேலை செய்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை தெரிவித்த தகவலில், `மகேஸ்வரன், இவரது நண்பர் அஜய் இவர்கள் இருவரும் 14 வயதான 7-ம் வகுப்பு மாணவியை மிரட்டி அவரது வாயில் துணியை திணித்து வலுக்கட்டாயமாக மகேஸ்வரனின் வீட்டு மொட்டை மாடிக்கு தூக்கி சென்று, அங்கு இருவரும் மாறி, மாறி அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். போராடிய அந்த சிறுமியை இருவரும் தலையில் ஒரு கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது." என்றனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User