"என் அப்பாவின் வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது.!"- அனந்திதா சுந்தர்

May 28, 2026 - 10:32
0
"என் அப்பாவின் வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது.!"- அனந்திதா சுந்தர்

சுந்தர்.சியின் அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'டபுள் ஆக்குபன்சி'.

இந்தப் படத்தில் சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியிருக்கிறார்.

சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா, வினோத் கிஷன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கியிருக்கிறார்.

'டபுள் ஆக்குபன்சி'
'டபுள் ஆக்குபன்சி'

சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அனந்திதா சுந்தர், “நான் இந்த படத்தில் கிரியேட்டிவ் புரடியூசராக பணி புரிந்துள்ளேன். இந்த படக் குழு எனக்கு ஒரு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போல. மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளோம்.

ஏ.சி சண்முகம் அவர்கள் மிகவும் சப்போர்ட் செய்தார்கள். அவர் இல்லை என்றால் நாங்கள் யாரும் இணைந்து இருந்திருக்க மாட்டோம்.

இந்த நேரத்தில் எனது அப்பா, அம்மா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் அப்பாவின் அனுபவம், வழிகாட்டுதல் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது.

படக்குழு
படக்குழு

மேலும் இந்த படத்தில் பணிபுரிந்த இயக்குநர், தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில விஷயங்கள் அதுவாக அமையும் என்று சொல்வார்கள்.

அது போல் எங்களுக்கு இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அமைந்துள்ளனர். அவர்கள் இல்லையென்றால் இவ்வளவு சிறப்பாக படம் அமைந்திருக்காது.

இந்த படம் அனைவரின் கனவு. கண்டிப்பாக அனைவரும் திரையரங்கில் பார்த்து சப்போர்ட் செய்யுங்கள்” என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User