'பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு வந்தோம்!'- கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு தவெக அமைச்சர்களின் திடீர் விசிட்!

Sep 04, 2026 - 17:31
0
'பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு வந்தோம்!'- கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு தவெக அமைச்சர்களின் திடீர் விசிட்!

தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு சென்று அக்கட்சியின் தலைவர்களோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

பெ.சண்முகம் - அமைச்சர் ஆனந்த்
பெ.சண்முகம் - அமைச்சர் ஆனந்த்

இந்த ஆலோசனைக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், 'சி.பி.எம் அலுவலகத்தில் அக்கட்சி தலைவர்களை சந்தித்தோம். இவர்களை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை பேசி முடித்திருக்கிறோம். டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்தும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் பேசினோம். கம்யூனிஸ்ட்டுகளின் புள்ளிவிவரத்தை கேட்ட தாசில்தார் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

தவெக அமைச்சர்கள்
தவெக அமைச்சர்கள்

அது அரசுக்கு தெரியாமல் நடந்திருக்கிறது. பல்கலைகழகங்களுக்கு இடதுசாரி மாணவர்கள் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்ட சம்பவத்துக்கும் வருத்தம் தெரிவித்தோம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்றார்.

அடுத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்துக்கும் தவெக அமைச்சர்கள் செல்லவிருப்பதாக தகவல். நாளை விசிக தலைவர் திருமாவளவனை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கின்றனராம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User