'10 வருஷமா உங்க மனைவிக்கு கிடைக்காத சீட், உங்களுக்கு எப்படி.?'- சுந்தர் சியை சாடிய பிரகாஷ் ராஜ்

Apr 19, 2026 - 13:02
 0
'10 வருஷமா உங்க மனைவிக்கு கிடைக்காத சீட், உங்களுக்கு எப்படி.?'- சுந்தர் சியை சாடிய பிரகாஷ் ராஜ்

மதுரை மத்திய தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பரப்புரை மேற்கொண்டிருக்கிறார்.

அந்தப் பரப்புரையில் சுந்தர் சி குறித்து பேசிய பிரகாஷ் ராஜ், "வேட்பாளராக ஆக்கப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பு வரை சினிமா சூட்டிங்கில் இருந்தீர்கள்.

எந்த அரசியல் பிரச்னைகளுக்கோ அல்லது மதுரை மக்களுக்காகவோ குரல் கொடுக்காமல், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென வந்துவிட்டால் மதுரை மக்கள் என்ன ஏமாளிகளா?

சுந்தர் சி
சுந்தர் சி

புதிய நீதிக்கட்சியில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அதன் கொள்கை என்ன?. சினிமாவில் இயக்குநர் ஆவதற்கு எத்தனை விஷயங்களை கஷ்டப்பட்டு கற்றிருப்பீர்கள்.

ஆனால், எம்.எல்.ஏவாக மட்டும் உடனே ஆகிவிடுவீர்களா?. உங்கள் மனைவி 10 வருடங்களாக அரசியல் செய்து கேள்விகளை கேட்கிறார். அவருக்கு கிடைக்காத சீட் உங்களுக்கு எப்படி கிடைத்தது என யோசிக்க மாட்டீர்களா?

இந்த சீரழிவை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பி.டி.ஆரின் அறிவையும் தொலைநோக்குப் பார்வையையும் இந்தியா முழுவதுமே பார்க்கிறது. அவர் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்து நேரடியாக அமைச்சர் ஆகவில்லை, பல ஆண்டுகள் உழைத்திருக்கிறார்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

மாற்றம் முன்னேற்றத்துக்கான மாற்றமாக இருக்க வேண்டும், அது ஏமாற்றமாகிவிடக் கூடாது. இது வெறும் தேர்தலல்ல. ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும், தன்மானத்திற்கும் சுய ஆட்சிக்கும் நடக்கும் தேர்தல். மதுரை வீரமண் என்று சொல்வதைச் செய்து காட்டுங்கள்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0