Mrunal Thakur: "இது வெறும் சடங்கு மட்டுமல்ல; இதுவே வளமான முதலீடு" - நடிகை மிருணாள் தாகூர்

Apr 19, 2026 - 12:01
 0
Mrunal Thakur: "இது வெறும் சடங்கு மட்டுமல்ல; இதுவே வளமான முதலீடு" - நடிகை மிருணாள் தாகூர்

அக்‌ஷய திருதியை முன்னிட்டு மக்கள் பலரும் புதிதான தங்க நகைகளை வாங்கிடத் திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள்.

மிருணாள் தாக்கூர் | Mrunal Thakur

இந்நிலையில் நடிகை மிருணாள் தாகூர் இந்த நாளைத் தனது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான ஒரு நாளாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் மிருணாள் தாகூர் பேசியிருக்கிறார்.

அவர், "அக்ஷய திருதியை நாள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எதை ஆரம்பித்தாலும் அது நேர்மறையாகவும், செழிப்பாகவும் அமையும் என்பதுதான் இதன் பின்னால் இருக்கும் அழகான எண்ணம்.

என்னைப் பொறுத்தவரை இது வெறும் சடங்கு மட்டுமல்ல. இதுவொரு மனநிலை. இந்த முறை நான் எனக்குள்ளேயே முதலீடு செய்ய நினைக்கிறேன். அது தொழில் ரீதியாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் மன ரீதியாகவும் இருக்க வேண்டும்.

இம்முறை, கொஞ்சம் நிதானமாகச் செயல்படுவது, எனக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களைத் தேர்ந்தெடுப்பது என முடிவெடுத்துள்ளேன்.

Mrunal Thakur|மிருணாள் தாகூர்
Mrunal Thakur|மிருணாள் தாகூர்

நிச்சயமாகச் சிறப்பான ஒன்றை வாங்குவது மகிழ்ச்சிதான். ஆனால், இந்த ஆண்டு அனுபவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளேன்.

அன்புக்குரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, நீண்ட நாட்களாகத் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த ஒரு நல்ல விஷயத்தைத் தொடங்குவது, இதுவே எனக்கு ஒரு வளமான முதலீடாகத் தெரிகிறது.

சிறுவயதில் எங்கள் வீட்டில் இந்த நாளை ஆவலோடு எதிர்பார்ப்போம். சின்னதாக ஒரு தங்க நகை வாங்குவது, அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வது என அந்த ஒற்றுமைதான் அந்த நாளை ஸ்பெஷலாக்கியது." எனத் தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0