அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விக்ரம்; கிளம்பிய சர்ச்சை - வனத்துறை அதிகாரிகள் விசாரணை!

Aug 11, 2026 - 16:00
0
அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விக்ரம்; கிளம்பிய சர்ச்சை - வனத்துறை அதிகாரிகள் விசாரணை!

நடிகர் சியான் விக்ரம், 'லார் கிப்பான்' என்ற அரிய வகை வெளிநாட்டு குரங்கினத்தைச் சேர்ந்த விலங்குடன் விளையாடி மகிழும் வீடியோ ஒன்றை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு காப்பாளர்கள் கடும் எதிர்ப்பையும் கவலையையும் தெரிவித்தனர்.

தென்கிழக்கு ஆசியாவை பூர்விகமாகக் கொண்ட லார் கிப்பான், அழிவின் விளிம்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட அரிய வகை உயிரினமாகும்.

இத்தகைய பாதுகாக்கப்பட்ட வெளிநாட்டு விலங்கைத் தனியார் இடத்தில் வளர்ப்பது சட்டப்பூர்வமானதா? அதற்கான உரிய ஆவணங்கள் மற்றும் வனத்துறை அனுமதி உள்ளதா? என்று கேள்விகள் எழுந்தன.

மேலும், பிரபலங்கள் இது போன்ற வீடியோக்களை வெளியிடுவது சட்டவிரோத வனவிலங்கு கடத்தலை ஊக்குவிக்கும் என்றும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.

சர்ச்சை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, விக்ரம் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்.

இந்த விலங்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விக்ரம் சம்பந்தியின் பண்ணை வீட்டில் வளர்க்கப்பட்டு வந்ததாகக் கூறப்படும் நிலையில், வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விக்ரம்
விக்ரம்

அந்த விலங்கு எவ்வாறு இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டது மற்றும் அதை வளர்ப்பதற்கான உரிய சட்டப்பூர்வ ஆவணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User