'நேரமிருந்தும் பிரச்னைகளை பேச மறுத்த விஜய்; ஏமாற்றமடைந்த தவெக தொண்டர்கள்!' - என்ன நடந்தது?

Apr 15, 2026 - 21:02
 0
'நேரமிருந்தும் பிரச்னைகளை பேச மறுத்த விஜய்; ஏமாற்றமடைந்த தவெக தொண்டர்கள்!' - என்ன நடந்தது?

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். தி.நகர் தொடங்கி எழும்பூர் வரைக்கும் வாகனத்தில் விஜய், மக்கள் மத்தியில் பேசாமல் போனது தொண்டர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது.

Vijay
Vijay

தி.நகர் முத்துரங்கன் சாலை, ஆயிரம் விளக்கு சுதந்திர தின பூங்கா, எழும்பூர் ரித்தர்டன் சாலை என மூன்று இடங்களில் மதியம் 4 மணி முதல் இரவு 8 மணி வரை விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கப்பட்டிருந்தது. கடந்த முறை விஜய் சென்னையில் பிரசாரம் செய்த போது காவல்துறை முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக-வினர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், இன்று விஜய்யின் பிரசாரத்துக்கு காவல்துறையினர் தீவிரமாக பாதுகாப்பு வழங்கியிருந்தனர். விஜய் நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்ட போது அவரின் காரை சுற்றி 10 ஜீப்களும் 2 போலீஸ் வேன்களும் வளையமாக போடப்பட்டு, சிக்னல்கள் க்ளியர் செய்யப்பட்டு பக்கவாட்டு சாலைகளை ப்ளாக் செய்து சௌகரியமாக அழைத்து வந்தனர். விஜய்யை பார்ப்பதற்காகவும் அவரின் பேச்சை கேட்பதற்காகவும் மதியம் 1 மணி முதல் தொண்டர்கள் மூன்று பாயின்ட்டிலும் காத்திருந்தனர். தொகுதி மறுவரை பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Vijay
Vijay

8000 கூப்பன் விவகாரமும் தேர்தல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த இரண்டு விவகாரங்களை பற்றியுமே விஜய் ட்வீட் செய்திருந்தார். பற்றியெரிந்து கொண்டிருக்கும் அந்த விவகாரங்களைப் பற்றி விஜய் பேசுவார் என தொண்டர்கள் எதிர்பார்க்க, மூன்று பாயின்ட்டிலுமே விஜய் வேட்பாளர்களை மட்டுமே அறிமுகம் செய்துவிட்டுச் சென்றார்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தை முக்கியமான கட்டத்தில் பாஜக கையில் எடுத்திருக்கிறது, அதை டெல்லி Vs தமிழ்நாடு என தேர்தல் பிரச்னையாக திமுக தீவிரமாக எடுத்துச் செல்கிறது. இந்நிலையில், கொள்கை எதிரி பற்றியும் அரசியல் எதிரி பற்றியும் விஜய் பேசி ஸ்கோர் செய்வார் என எதிர்பார்த்த தொண்டர்கள் ஏமாந்து போயினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0