“திருமாவளவன் முதல்வர் ஆக வேண்டும் என மக்கள் சொல்லும் காலம் வரும்” - திருமா அதிரடி

Apr 14, 2026 - 13:01
 0
“திருமாவளவன் முதல்வர் ஆக வேண்டும் என மக்கள் சொல்லும் காலம் வரும்” - திருமா அதிரடி

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் களமிறங்கி இருக்கின்றன.

அந்த வகையில் நேற்று ( ஏப்ரல்.13) செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணியை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

அப்போது பேசிய திருமாவளவன், “ஊடகங்கள் எல்லாம் நான்கு முனை போட்டி என்கிறார்கள், அதுவே தப்பு. இரண்டு முனைதான், இரண்டு அணி தான்.

திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் ஒரு அணி. மற்ற இரண்டு பேரும் தனியாக நிற்கிறார்கள். ஒருத்தர் விசில் அடிக்கிறார்.

இன்னொருத்தர் தனியாக ஆவர்த்தனம் செய்கிறார். அவர்கள் போட்டியிலேயே இல்லை. விஜய்க்கு தானாக கூட்டம் வருகிறது, அதனால் அவர் அடுத்த முதலமைச்சர் என ஊதிப் பெருக்குகிறார்கள்.

ஓடி ஆடி உழைக்கத் தேவையில்லை, மக்களுக்கு தொண்டு செய்ய தேவையில்லை, சினிமாவில் ஆட்டம் போட்டால் போதும், அடுத்த முதலமைச்சர் ஆகிவிட முடியும்.

இப்படி ஒரு கனவு, தமிழ்நாட்டில் இருக்கிற ஹீரோ, டைரக்டர் எல்லோருக்கும் அப்படி ஒரு ஆசை இருக்கிறது. 35 வருடமாக இந்த மக்கள் களத்தில் நிற்கிற நாம் கூட இதுவரையில் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொன்னதில்லை.

திருமாவளவன்
திருமாவளவன்

நமக்கு பிராக்டிக்கல் என்னவென்று தெரியும். கிரவுண்ட் ரியாலிட்டி என்னவென்று தெரியும். மக்களாகப் பார்த்து ஏன் திருமாவளவன் இந்தத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகக்கூடாது என்று சொல்லுகிற காலம் வரவேண்டும், அப்படி வரும்.

ஆனால் பலபேர் கட்சி ஆரம்பித்த உடனே நான்தான் முதலமைச்சர், இங்கே இரண்டே இரண்டு பேருக்குதான் போட்டி, ஒன்று DMK இன்னொன்று TVK என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்" எனப் பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0